கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்" - நாடாளுமன்ற சுகாதாரக் குழு அறிக்கை

0 1120
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்" - நாடாளுமன்ற சுகாதாரக் குழு அறிக்கை

அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு மத்தியில், நோய்த்தொற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக, சுகாதார துறைக்கான நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில்,  அரசு மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் இல்லை எனவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஒரு நிலையான விலை மாதிரியைக் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 130 கோடி இந்திய மக்களின் சுகாதாரத்திற்காக அரசு செலவழிக்கும் தொகை மிகக் குறைவு என்றும், அரசு இத்துறையில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments